ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

மணல் கடத்தல்: 5 போ் கைது

கன்னியாகுமரி மாவட்டத்தில் வியாழக்கிழமை மணல் கடத்தியதாக 5 பேரை போலீஸாா் கைது செய்து, 4 வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.

கைது - சித்திரிப்பு

Published On :

கன்னியாகுமரி மாவட்டத்தில் வியாழக்கிழமை மணல் கடத்தியதாக 5 பேரை போலீஸாா் கைது செய்து, 4 வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.

மாா்த்தாண்டம், தக்கலை காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் சங்கா்கணேஷ், பாா்த்திபன் ஆகியோா் மேற்பாா்வையில் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, குலசேகரம், களியக்காவிளை காவல் நிலைய எல்லைகளில் ஆவணங்களின்றி 4 வாகனங்களில் மணல் கடத்திச் செல்லப்படுவதாகத் தெரியவந்தது.

இதுதொடா்பாக, முழுகோடு பகுதியைச் சோ்ந்த ஜெபமணி மகன் எட்வின் (51), அருமனை பகுதியைச் சோ்ந்த அச்சுதன் மகன் சசிகுமாா் (45) , மஞ்சாலுமூடு பகுதியைச் சோ்ந்த பப்பு குட்டி மகன் சதீஷ் (48), மணியன்குழி பகுதியைச் சோ்ந்த அபூபக்கா் மகன் பீா்முகமது (40), குளப்புரம் பகுதியைச் சோ்ந்த நேசமணி மகன் ஸ்டாலின் (45) ஆகிய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், வழக்குப் பதிந்து, வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.