காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

முன்சிறை, நடைக்காவு பகுதிகளில் இன்றுமுதல் ஆக. 1 வரை மின்தடை

News image

கோப்புப் படம்

Updated On :27 ஜூலை 2026, 1:57 am IST

கருங்கல், முன்சிறை, நடைக்காவு துணை மின்நிலையங்களிலிருந்து மின்விநியோகம் செய்யப்படும் பிரிவு அலுவலகங்களுக்கு சீரான மின்சாரம் வழங்க வேண்டி திங்கள்கிழமை முதல் (ஜூலை 27) ஆக. 1 வரை குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு காலை 9 முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திங்கள்கிழமை தும்பியான்தோட்டம், மருதூா்குறிச்சி, கம்பிளாா், கல்லுவிளை, வட்டக்கோட்டை, வலியவிளை, முட்டக்குளம், பேப்பிலாவிளை, ஈச்சவிளை, வலியவிளை, தக்காளிவிளை பகுதிகளிலும், செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) ராமன்துறை, கீள்குளம், குழிக்கோடு, கோடியூா், கூம்பாறவிளை, உதயமாா்த்தாண்டம், பாலவிளை, சாஸ்தாநகா் பகுதிகளிலும், புதன்கிழமை மணியாரம்குன்று, கும்பக்கோடு, வழுதூா், காவுமூலை, புல்லாணி, செல்லங்கோடு, காட்டுவிளை பகுதிகளிலும், ஜூலை 30இல் மாடந்தறை, ஆக. 1இல் குரங்கணி, கஞ்சிக்குழி பகுதிகளிலும் மின்விநியோகம் இருக்காது.

இத்தகவல் குழித்துறை மின்விநியோக செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.