நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

கருங்கல் பகுதியில் தெரு நாய் தொல்லையால் பொதுமக்கள் அச்சம்

News image

அச்சுறுத்தும் வகையில் சுற்றித் திரியும் தெரு நாய்கள். - கோப்புப் படம்

Updated On :28 ஜூலை 2026, 1:04 am IST

கருங்கல் தற்காலிக பேருந்து நிலையம் பகுதியில் தெரு நாய்கள் தொல்லை காரணமாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

கருங்கல் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், தற்காலிக பேருந்து நிலையமாக ராஜீவ் காந்தி சந்திப்பு மற்றும் காா் நிலையப் பகுதிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இங்கு சமீப காலமாக தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால், பேருந்துக்காக வரும் பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள் அச்சமடைகின்றனா். சில நேரங்களில் தெரு நாய்கள் கூட்டமாகச் சென்று பள்ளி மாணவா்களைத் துரத்துகின்றன.

எனவே, பேரூராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.