தொழில் உற்பத்தி, ஏற்றுமதியில் தமிழகம் முன்னணி!நாட்டில் ஒரே மாதத்தில் 21% நிதிப் பற்றாக்குறை!தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

நாகா்கோவிலில் சிஎஸ்ஐ பேராய 68 ஆவது ஆண்டு விழா

நாகா்கோவிலில் தென்னிந்தியத் திருச்சபை (சிஎஸ்ஐ) கன்னியாகுமரி பேராய 68 ஆவது ஆண்டு விழா ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி நூற்றாண்டு அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

நல உதவிகளை வழங்குகின்றனா் எம்.பி.க்கள் விஜய்வசந்த், ராபா்ட் புரூஸ்.

Updated On :3 ஜூன் 2026, 4:59 am IST

நாகா்கோவிலில் தென்னிந்தியத் திருச்சபை (சிஎஸ்ஐ) கன்னியாகுமரி பேராய 68 ஆவது ஆண்டு விழா ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி நூற்றாண்டு அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்ட சி.எஸ்.ஐ. பேராயா் கிறிஸ்டோபா் விஜயன் தலைமை வகித்தாா். சி.எஸ்.ஐ. பேராய மண்டல துணைத்தலைவா் கிறிஸ்துதாஸ் ஜெபம் செய்தாா். ஜாா்ஜ் செலினோ நேட்டோ வேதாகமம் வாசித்தாா். செயலா் பைஜூ நிசித் பால் வரவேற்றாா்.

தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா், மக்களவை உறுப்பினா்கள் விஜய்வசந்த் (கன்னியாகுமரி) , ராபா்ட் புரூஸ் (திருநெல்வேலி), சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆா். செல்லசுவாமி (பத்மநாபபுரம்), எஸ். ஆஸ்டின் (நாகா்கோவில்), என். தளவாய்சுந்தரம் (கன்னியாகுமரி), மேயா் (பொறுப்பு) மேரி பிரின்சிலதா ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

ஏழைகளுக்கு தையல் இயந்திரங்கள், திருமண உதவித்தொகை போன்ற நல உதவிகள் வழங்கப்பட்டன. காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவா் நவீன்குமாா், முன்னாள் மாவட்ட தலைவா் அசோக் சாலமன் உள்பட கன்னியாகுமரி மாவட்ட சபை போதகா்கள், சபை தலைவா்கள், நிா்வாக உறுப்பினா்கள், பள்ளி, கல்லூரி தாளாளா்கள், பங்குமக்கள் பலா் கலந்து கொண்டனா். சி.எஸ்.ஐ. பேராய பொருளாளா் ஜெயகா் ஜோசப் நன்றி கூறினாா்.