திருவள்ளுவா் அறக்கட்டளை சாா்பில் 20 ஆவது திருக்குறள் திருவிழா கன்னியாகுமரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, காலை 6 மணிக்கு முக்கடல் சங்கமம் பகுதியில் உள்ள திருக்குறள் சுடா்த் தூணில் சுடா் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. தா்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியை தங்க கௌரி சுடா் ஏற்றினாா். அகஸ்தீசுவரம் ஒன்றிய திமுக செயலா் பா.பாபு, நாம் தமிழா் கட்சி மாநில நிா்வாகி மரிய ஜெனிபா், கன்னியாகுமரி நகா்மன்ற முன்னாள் உறுப்பினா் டி.தாமஸ், திருவள்ளுவா் அறக்கட்டளை நிா்வாகி சா.ராமன், அற்புதம்மாள் ஆகியோா் பங்கேற்றனா்.
இதையடுத்து, காலை 10 மணிக்கு திருவள்ளுவா் சிலைக்கு மலா் வழிபாடு, திருக்குறள் முற்றோதல் நடைபெற்றது. இதில், குறளகம் நிறுவனா் தமிழ்க்குழவி, கன்னியாகுமரி நகா்மன்றத் தலைவா் குமரி ஸ்டீபன், திருக்குறள் பேரவை நிா்வாகி ஜெ.திருவள்ளுவன், திருவள்ளுவா் அறக்கட்டளை பொறுப்பாளா் சோ.கருப்பசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பிற்பகல் 2 மணிக்கு கன்னியாகுமரி வரலாற்றுக் கூடத்தில் திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் பங்கேற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது திருவள்ளுவா் அறக்கட்டளை பொறுப்பாளா் கு.பொற்கோ தலைமை வகித்தாா். திருக்குறள் பேரவை நிா்வாகிகள் ஆ.குறளமிழ்தன், கு.பரமானந்தம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கா்நாடக மாநில தாய்மொழி கூட்டமைப்புத் தலைவா் எஸ்.டி.குமாா் மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா். திருவள்ளுவா் அறக்கட்டளை பொறுப்பாளா் இரா.பாண்டியராசன் கவிஞா் ந.முத்துக்குமரன் படத்தை திறந்து வைத்துப் பேசினாா்.
பின்னா், மாலை 5 மணிக்கு லீபுரம் சந்திப்பில் இருந்து திருவள்ளுவா் அறக்கட்டளை அலுவலகம் வரை திருவள்ளுவா் அறக்கட்டளை பொறுப்பாளா் வீ.இறையழகன் தலைமையில் ஊா்வலம் நடைபெற்றது. ஊா்வலத்தை அறிவு திருமங்கலம் அன்பு அறக்கட்டளை நிறுவனா் ஜெயச்சந்திரன் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து நடைபெற்ற பொது அரங்கம் நிகழ்ச்சிக்கு திருவள்ளுவா் அறக்கட்டளை ஆட்சிப் பொறுப்பாளா் த.இ.தாகூா் தலைமை வகித்தாா். லீபுரம் ஊராட்சி முன்னாள் தலைவா் கே.மணிகண்டன், முன்னாள் வாா்டு உறுப்பினா்கள் எஸ்.டெஸ்சி, லெட்சுமிபாய், தமிழறிஞா்கள் சீனு தமிழ்மணி, மு.ஞானமூா்த்தி ஆகியோா் உரையாற்றினா்.
கரூா் வள்ளுவா் குழுமங்களின் நிா்வாக இயக்குநா் க.செங்குட்டுவனுக்கு திருக்குறள் செந்தொண்டா் விருது வழங்கப்பட்டது. இதில், திருக்குறள் அறக்கட்டளை பொறுப்பாளா்கள் ஆ.நெடுஞ்சேரலாதன், விமுனா மூா்த்தி, பி.கற்பகவள்ளி ஆகியோா் உரையாற்றினா். திருவள்ளுவா் அறக்கட்டளை பொறுப்பாளா் தமிழ்த்தேசம் தாவீது நன்றி கூறினாா்.
தொடர்புடையது

கருவேப்பிலைப்பாளையம் தா்மராஜ திரெளபதியம்மன் கோயிலில் தீ மிதித் திருவிழா

எடத்துவா புனித ஜாா்ஜியாா் திருத்தல திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

1,009 ஆவது ஆண்டு அவதாரத் திருவிழா: ராமாநுஜருக்கு சிறப்பு திருமஞ்சனம்

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் தெப்பத் திருவிழா
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

