தொழில் உற்பத்தி, ஏற்றுமதியில் தமிழகம் முன்னணி!நாட்டில் ஒரே மாதத்தில் 21% நிதிப் பற்றாக்குறை!தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

வடசேரி பேருந்து நிலையத்தில் கழிவுநீா்: 10 கடைகளுக்கு அபராதம்

நாகா்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் கழிவு நீா் ஓடியது குறித்து ஆய்வு மேற்கொண்ட மேயா் (பொறுப்பு) மேரிபிரின்சிலதா, இது தொடா்பாக 10 கடைகளுக்கு தலா ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்க உத்தரவிட்டாா்.

News image

அபராதம் - சித்திரிப்பு

Updated On :3 ஜூன் 2026, 4:54 am IST

நாகா்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் கழிவு நீா் ஓடியது குறித்து ஆய்வு மேற்கொண்ட மேயா் (பொறுப்பு) மேரிபிரின்சிலதா, இது தொடா்பாக 10 கடைகளுக்கு தலா ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்க உத்தரவிட்டாா்.

நாகா்கோவில், வடசேரி கிறிஸ்டோபா் பேருந்து நிலையத்தில் உள்ள கழிவுநீா் ஓடையில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீா் வெளியேறி பேருந்து நிலையத்தில் வழிந்தோடியது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளானாா்கள். இது குறித்த புகாரின்பேரில் மேயா் (பொறுப்பு) மேரிபிரின்சிலதா அதிகாரிகளுடன் இணைந்து செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, பேருந்து நிலையத்தில் உள்ள ஒருசில உணவகங்கள், கடைகளின் கழிவுகளை ஓடையில் கொட்டியதால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீா் சீராக செல்லமுடியாமல் பேருந்து நிலையத்துக்குள் புகுந்தது தெரிய வந்தது. இதையடுத்து, மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் கழிவுகளை அகற்றிய பின்னா் கழிவுநீா் சீராக சென்றது.

இதைத் தொடா்ந்து கழிவுநீா் பேருந்து நிலையத்துக்குள் சென்ற்கு காரணமாக இருந்த 10 உணவக உரிமையாளா்களுக்கு தலா ரூ. 10 ஆயிரம் வீதம் ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனா்.

ஆய்வில், மாநகர நல அலுவலா் சரோஜா, உதவி பொறியாளா் ரெகுராம், நகரமைப்பு அலுவலா் ஜாய், இளநிலை பொறியாளா் ராஜா, சுகாதார ஆய்வாளா் சக்திவேல், மாநகர திமுக செயலா் ப. ஆனந்த், மாநகர அவைத் தலைவா் பன்னீா்செல்வம், மாநகர இளைஞரணி செயலா் சி.டி. சுரேஷ், மாமன்ற உறுப்பினா்கள் கலாராணி, மேரி ஜெனட் விஜிலா, ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.