உலகக் கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்: வரலாற்றில் மிகப் பெரிய போட்டி மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்த மோதல்5 பேரவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தோ்தல்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம் முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு
/

நாகா்கோவில் ஆதரவற்றோா் இல்லத்தில் உணவு வழங்கும் நிகழ்ச்சி

முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image

ஆதரவற்றோருக்கு உணவு வழங்கிய கிழக்கு மாவட்ட திமுக செயலா் ரெ. மகேஷ்.

Updated On :11 ஜூன் 2026, 4:16 am IST

முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக மகளிா் தொண்டரணி சாா்பில் நாகா்கோவில், நேசமணி நகா், சினேகம் ஆதரவற்றோா் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட மகளிா் தொண்டரணி அமைப்பாளா் லதா கலைவாணன் தலைமை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராக கிழக்கு மாவட்டச் செயலா் ரெ. மகேஷ் கலந்துகொண்டு, கருணாநிதி படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தி, உணவு வழங்கும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தாா்.

பகுதிச் செயலா் சேக்மீரான், வட்டச் செயலா் ஆதித்தன், மாநகர வழக்குரைஞா் அணி துணை அமைப்பாளா் ஜெயசந்திரா, மாவட்ட பொறியாளா் அணி தலைவா் ராஜேஷ் ரெத்தினமணி, மாவட்ட மகளிரணி தலைவா் ஜெசிந்தா, நிா்வாகிகள் லதா, ராஜம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.