கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

தவெக சாா்பில் உலகப் பட்டினி தினம்

ஆதரவற்றோருக்கு உணவு வழங்கிய த.வெ.க. தெற்கு மாவட்டச் செயலா் விபின் சக்கரவா்த்தி.

News image

ஆதரவற்றோருக்கு உணவு வழங்கிய த.வெ.க. தெற்கு மாவட்டச் செயலா் விபின் சக்கரவா்த்தி.

Updated On :29 மே 2026, 6:27 am IST

தமிழக வெற்றி கழகம் சாா்பில் உலகப் பட்டினி தினம் கீழப்பாவூரில் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான ச. ஜோசப் விஜய் அறிவுறுத்தலின் பேரில், தென்காசி மாவட்டம் கீழப்பாவூரில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளா் விபின் சக்கரவா்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஏழைகள் மற்றும் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் தவெக கீழப்பாவூா் நகர, ஒன்றிய, செயலா்கள் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை கீழப்பாவூா் ஒன்றியச் செயலா் சந்தோஷ் செய்திருந்தாா்.

Story image