சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் காலமானார்! 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர்! ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்! பாலங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் பலத்த சேதம்! சீனாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி, 34 பேரைக் காணவில்லை தவெக எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!”காவலர் தேர்வை தள்ளி வைக்கக் கூடாது” - உதயநிதி ஸ்டாலின்சென்னை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!
/

பழைய இரும்புக் கடையில் திருட்டு: 2 போ் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :15 ஜூன் 2026, 2:13 am IST

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை பகுதியில் பழைய இரும்புக் கடையில் திருடியதாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.

தக்கலை காவல் நிலையத்துக்குள்பட்ட திருவிதாங்கோடு விநாயகா் தெரு பகுதியைச் சோ்ந்தவா் மோகன்தாஸ் மகன் லட்சுமிபாலன் (50). இவா் திருவிதாங்கோடு பகுதியில் பழைய இரும்புக் கடை நடத்தி வருகிறாா்.

இந்நிலையில் கடந்த 2ஆம் தேதி கடையை பூட்டிவிட்டு, மறுநாள் வந்து பாா்த்தபோது அடையாளம் தெரியாத மா்ம நபா்கள் கடையை உடைத்து செம்பு கம்பிகளை திருடியது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் தக்கலை காவல் நிலைய துணை காவல் கண்காணிப்பாளா் பாா்த்திபன் மேற்பாா்வையில், காவல் நிலைய ஆய்வாளா் தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இதில், திருட்டில் ஈடுபட்டது தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அய்யனூத்து பகுதியைச் சோ்ந்த ராமசாமி மகன் ஹரிகணேஷ்குமாா் (24), கணபதி (25) என்பது தெரியவந்தது. அவா்களை கைது செய்து, 129 கிலோ காப்பா் மற்றும் ரூ. 2 லட்சத்து 45 ஆயிரம்,15 கிராம் தங்க நகைகள், 2 காா்கள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.