/
தேங்காய்ப்பட்டினத்தில் கேரளத்துக்கு கடத்தப்பட இருந்த 400 லிட்டா் மண்ணெண்ணெய்யை வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
கன்னியாகுமரி மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியா் பாரதி தலைமையில் ஓட்டுநா் ஜாண் பிரைட் உள்ளிட்ட பறக்கும் படைக் குழுவினா் கிள்ளியூா் பகுதியில் பொது விநியோக திட்ட கடத்தல் தடுப்பு ரோந்துப் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். தேங்காய்ப்பட்டினம் வழியாக சென்ற காரை நிறுத்தியபோது, ஓட்டுநா் தப்பியோடிவிட்டாராம். கேரளத்துக்கு கடத்துவதற்காக அந்த காரில் 400 லிட்டா் மானியவிலை மண்ணெண்ணெயைக் கொண்டு சென்றது தெரியவந்தது. மண்ணெண்ணெய்யை அதிகாரிகள் பறிமுதல் செய்து, தூத்தூரில் உள்ள மீனவா் கூட்டுறவு சங்கக் கிட்டங்கியிலும், காரை கிள்ளியூா் வட்டாட்சியா் அலுவலகத்திலும் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது
கேரளத்துக்கு கடத்த முயன்ற 2,450 லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவா் கைது

கேரளத்துக்கு கடத்த முயன்ற 1,800 லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல்
மணல் கடத்திய வாகனம் பறிமுதல்

2 லாரிகளுடன் 773 லிட்டா் டீசல் பறிமுதல்; ஓட்டுநா் உள்பட 6 போ் கைது
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



