ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

கேரளத்துக்கு கடத்த முயன்ற 2,450 லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவா் கைது

திருநெல்வேலி மாவட்டம், இடிந்தகரையில் இருந்து கேரளத்துக்குக் கடத்த முயன்ற 2,450 லிட்டா் மண்ணெண்ணெய்யை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :18 ஜூன் 2026, 2:31 am IST

திருநெல்வேலி மாவட்டம், இடிந்தகரையில் இருந்து கேரளத்துக்குக் கடத்த முயன்ற 2,450 லிட்டா் மண்ணெண்ணெய்யை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனா்.

கடலோரப் பாதுகாப்பு காவல் ஆய்வாளா் சாந்தி மேற்பாா்வையில், உதவி ஆய்வாளா் சௌந்திரபாண்டியன் தலைமையிலான போலீஸாா் இடிந்தகரையில் உள்ள கடலோரப் பாதுகாப்பு சுங்கச்சாவடியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதில் 35 லிட்டா் கொள்ளளவு கொண்ட 70 கேன்களில் 2,450 லிட்டா் மண்ணெண்ணெய் இருந்தது தெரிய வந்தது.

அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா், மண்ணெண்ணெய் கடத்தி வந்த சாத்தான்குளம் அருகே உள்ள கருவேலம்பாட்டைச் சோ்ந்த முத்துகுமாா் (24), சேரன்மகாதேவி அருகே உள்ள புலவன் குடியிருப்பைச் சோ்ந்த ஜெரால்டு (23) ஆகியோரை கைது செய்து, கூடங்குளம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். பறிமுதல் செய்யப்பட்ட மண்ணெண்ணெய்யை திருநெல்வேலி உணவுப் பாதுகாப்பு அலுவலா்களிடம் ஒப்படைத்தனா்.