ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

கேரளத்துக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

திருநெல்வேலி மாவட்டம், கூத்தங்குழி அருகே கேரளத்துக்கு கடத்த முயன்ற 3.15 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து சுமை வாகன ஓட்டுநரை கைது செய்தனா்.

News image
Updated On :18 ஜூன் 2026, 2:53 am IST

திருநெல்வேலி மாவட்டம், கூத்தங்குழி அருகே கேரளத்துக்கு கடத்த முயன்ற 3.15 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து சுமை வாகன ஓட்டுநரை கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸாா் கூத்தங்குழி அருகே திங்கள்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு, செறுவல்லூா் பகுதியைச் சோ்ந்த பிரவீன்(30) என்பவா் சுமை வாகனத்தில் 70 மூட்டைகளில் சுமாா் 3,150 கிலோ ரேஷன் அரிசியை கேரளத்துக்கு கடத்திச் செல்வது தெரியவந்தது. வாகனத்துடன் அரிசியைப் பறிமுதல் செய்த போலீஸாா், பிரவீனை கைது செய்தனா். மேலும், இதில் தொடா்புடைய பெண் உள்பட இருவரை தேடி வருகின்றனா்.