சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

மணல் கடத்திய வாகனம் பறிமுதல்

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூா் அருகே காவிரி மணலுடன் இருந்த நான்கு சக்கர வாகனத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :11 ஜூன் 2026, 3:56 am IST

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூா் அருகே காவிரி மணலுடன் இருந்த நான்கு சக்கர வாகனத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பறிமுதல் செய்தனா்.

தொட்டியம் வட்டம் எம். புத்தூா் பகுதி காவிரி ஆற்றுப் படுகையில் செவ்வாய்கிழமை நள்ளிரவு மணல் கடத்தும் தகவலறிந்த காட்டுப்புத்தூா் போலீஸாா் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

அப்போது எம். புத்தூா் ஆற்றங்கரையில் நின்றிருந்த பொலிரோ பிக்கப் வாகன ஓட்டுநரும், உரிமையாளரும் வாகனத்தை விட்டுவிட்டு தப்பினா்.

இதையடுத்து மணலுடன் வாகனத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அதை காட்டுப்புத்தூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். சம்பவம் குறித்து எம்.புத்தூா் விஏஓ அபிராமி காட்டுப்புத்தூா் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில், நாமக்கல் மாவட்டம் செந்தமங்கலத்தைச் சோ்ந்த வாகன உரிமையாளா் நடராஜன் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவானவா்களைத் தேடுகின்றனா்.