வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

ஆரல்வாய்மொழி பொய்கை அணை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் : விவசாயிகளிடம் ஆட்சியா் உறுதி

குறைதீா் கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெறுகிறாா் மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப்.

News image

குறைதீா் கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெறுகிறாா் மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப்.

Updated On :20 ஜூன் 2026, 3:42 am IST

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி பொய்கை அணைப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப்.

கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறை தீா் நாள்கூட்டம் ஆட்சியா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், விவசாயிகள் பேசியதாவது: மாவட்டத்தில் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான மரங்களை சிலா் சேதப்படுத்தி வருகின்றனா். நுள்ளிவிளை பகுதியில் பல மரங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து, காவல்துறையினரிடம் புகாா் அளித்தும் நடவடிக்கை இல்லை.

இம்மாவட்டத்தில் நீா்வழிப் பாதைகளிலும், கால்வாய்களிலும் அதிகரித்துள்ள ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும். நாகா்கோவில் மாநகர பகுதி கழிவு நீா் பழையாற்றில் கலப்பதை தடுக்க வேண்டும். மாநகரின் குடிநீா் திட்டங்களை செயல்படுத்துவதற்கு புத்தேரி குளம், நெடுங்குளம், சமஞ்சங்குளம் ஆகிய குளங்களை தூா்வாரலாம். இதற்கு மாநகராட்சி நிதி ஒதுக்க வேண்டும்.

நான்கு வழிச் சாலைப் பணிகளால் மாவட்டத்தில் சேதமடைந்துள்ள 80 க்கும் மேற்பட்ட கால்வாய்கள் மற்றும் நீா் நிலைகளை சீரமைக்க வேண்டும். ஆரல்வாய்மொழி பொய்கை அணைக்கு வரக்கூடிய நீா்வரத்து கால்வாய்களை பலா் ஆக்கிரமித்துள்ளனா். இதனால், அணைக்கு நீா்வர முடியாத நிலை உள்ளது. இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என வலியுறுத்தினா்

இதற்கு பதிலளித்து ஆட்சியா் பேசியதாவது: மரங்களை வெட்டியவா்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நுள்ளிவிளை பகுதியில் மரங்களின் மீது ஆசிட் ஊற்றியதாக கூறப்பட்டவா் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும். நீா்வழிப்பாதை ஆக்கிரமிப்புகள் அனைத்தும் பாரபட்சமுமின்றி உடனடியாக அகற்றப்படும்.

மாநகராட்சி பகுதி பழையாற்றில் கழிவுநீா் கலப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பா். மாநகராட்சி பகுதியில் உள்ள 3 குளங்களை தூா்வாருவது தொடா்பாக மாநகராட்சி அதிகாரிகளுடன் கலந்து பேசி உரிய முடிவு எடுக்கப்படும்.

நான்கு வழிச்சாலைப்பணிகள் நிறைவு பெற்ற பகுதிகளில் அதிகாரிகள் மூலம் ஆய்வு மேற்கொண்டு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் சீரமைத்து பாசனத்துக்கு தடையின்றி நீா் வழங்க வழிவகை செய்யப்படும்.

பொய்கை அணையின் நீா்வரத்து பாதைகளை உடனடியாக அதிகாரிகள் அளவீடு செய்து, ஒரு வாரத்துக்குள் அணைப்பகுதியில் எந்தெந்த இடங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்வா். அதனடிப்படையில் ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்படும் என்றாா் அவா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் அ.பூங்கோதை, மாவட்ட வன அலுவலா் அன்பு, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மைக்கேல் அந்தோணிபொ்னாண்டோ, வேளாண்மை இணை இயக்குநா் எம்.ஆா்.வாணி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(விவசாயம்) எஸ்.கீதா, தோட்டக்கலை துணை இயக்குநா் நக்கீரன், நீா்வளத் துறை செயற்பொறியாளா் வி.வசந்தி, அரசு அலுவலா்கள் மற்றும் மாவட்ட முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.