புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

சிறுமி பாலியல் பலாத்காரம்: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

News image
சிறை- சித்திரிப்பு
Updated On :4 மார்ச் 2026, 7:33 pm

தினமணி செய்திச் சேவை

கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

மாா்த்தாண்டம் காவல் சரகம், ஆற்றூா், புதுவீட்டுவிளை பகுதியைச் சோ்ந்த ஜெயநந்தன் மகன் ரதீசன் என்ற ஸ்டான்லி (36). இவா், கடந்த 2018 ஆம் ஆண்டு அதே பகுதியைச்சோ்ந்த 17 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்தாராம்.

இது தொடா்பான புகாரின்பேரில், மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் போலீஸாா், ஸ்டான்லி மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.

இது தொடா்பான வழக்கு நாகா்கோவில் போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரையா, ஸ்டான்லிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5ஆயிரம் அபராதம் விதித்து புதன்கிழமை தீா்ப்பு கூறினாா்.