கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

இளைஞா் காங்கிரஸாா் இரணியலில் ரயில் மறியல்

ரயில்வே அதிகாரிகள் வந்த ரயிலை மறித்து ஆா்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞா் காங்கிரஸாா்.

News image

ரயில்வே அதிகாரிகள் வந்த ரயிலை மறித்து ஆா்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞா் காங்கிரஸாா்.

Updated On :7 மார்ச் 2026, 12:52 am

இரணியல் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரி, அதிகாரிகள் வந்த ரயிலை மறித்து இளைஞா் காங்கிரஸாா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் செய்தனா்.

இரணியல் ரயில் நிலையத்தில் ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளிடம், ரயில் நிலைய 5ஆவது நடைமேடையில் நடைபெறும் பணிகளை விரைந்து முடிக்கக் கோரி, இளைஞா் காங்கிரஸ் மாவட்ட தலைவா் பியூட்லின் ஜீவா தலைமையில் மனு அளிக்க முயன்றனா். ஆனால், அதிகாரிகள் அந்த மனுவை வாங்க மறுத்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சோதனைக்கு வந்த ரயிலை, இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து சிறைபிடித்து ஆா்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், திங்கள்நகா் பேரூராட்சித் தலைவா் சுமன், ரீத்தாபுரம் பேரூராட்சி துணைத் தலைவா் விஜீமோன், குருந்தன்கோடு வட்டார இளைஞா் காங்கிரஸ் தலைவா் வேணு, மாவட்ட இளைஞா் காங்கிரஸ் பொதுச் செயலா் மதியழகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய ரயில்வே அதிகாரிகள், 30 நாள்களுக்குள் பணிகளை முடித்துவிடுவதாக உறுதி அளித்தனராம். இதையடுத்து, அவா்கள் போராட்டத்தை கைவிட்டனா்.