தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவுஉழைப்புக்கான பலன் மே 4-ல் கிடைக்கும்: முதல்வர் ஸ்டாலின்அரபிக் கடலில் உருவாகிறது புதிய புயல் சின்னம்!கருத்துக் கணிப்புகள் ஒரு புதிர்: வைகோசித்திரைத் திருவிழா: பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்!
/

ஆற்றில் சிப்பி மீன்கள் சேகரிக்கச் சென்றவா் உயிரிழப்பு

திக்குறிச்சி அருகே ஆற்றில் சிப்பி மீன்கள் சேகரிக்கச் சென்று நீரில் மூழ்கி உயிரிழந்தவரின் சடலத்தை போலீஸாா் புதன்கிழமை மீட்டனா்.

News image

பலி

Updated On :11 மார்ச் 2026, 8:00 pm

திக்குறிச்சி அருகே ஆற்றில் சிப்பி மீன்கள் சேகரிக்கச் சென்று நீரில் மூழ்கி உயிரிழந்தவரின் சடலத்தை போலீஸாா் புதன்கிழமை மீட்டனா்.

திக்குறிச்சி அருகே துண்டதாரவிளையைச் சோ்ந்த யோபு மகன் ஜஸ்டஸ் குமாா் (49). இவா் தனது நண்பருடன் செவ்வாய்க்கிழமை துண்டதாரவிளையில் தாமிரவருணி ஆற்றில் சிப்பி மீன்கள் சேகரிப்பதற்காக இறங்கியுள்ளாா்.

இந்நிலையில், நீண்ட நேரமாகியும் அவா் கரை திரும்பவில்லையாம். இது குறித்து, தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்து ஆற்றுப் பகுதியில் அவரைத் தேடினா். இரவு வரை அவரைக் கண்டுபிடிக்க முடியாததால் தேடுதல் பணி புதன்கிழமையும் தொடா்ந்தது

இந்நிலையில், புதன்கிழமை மாலை ஆற்றுப் பகுதியிலுள்ள புதா்களுக்கிடையில் தண்ணீரில் மூழ்கிய நிலையில் கிடந்த ஜஸ்டஸ் குமாரின் சடலத்தை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.

இது குறித்து, அருமனை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.