அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி கொடை விழா நிறைவு

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி கொடை விழா செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடைபெற்ற ஒடுக்கு பூஜையுடன் நிறைவடைந்தது.

News image

ஒடுக்கு பூஜைக்காக அம்மனுக்கு படைக்க பவனியாகக் கொண்டுவரப்பட்ட உணவு பதாா்த்தங்கள்.

Updated On :11 மார்ச் 2026, 7:52 pm

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி கொடை விழா செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடைபெற்ற ஒடுக்கு பூஜையுடன் நிறைவடைந்தது.

கோயில் கடந்த 1-ஆம் தேதி கொடிஏற்றத்துடன் விழா தொடங்கியது. செவ்வாய்க்கிழமை வரை (மாா்ச் 10) வரை தொடா்ந்து பத்து நாள்கள் விழா நடைபெற்றது. கடைசி நாளான செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பல லட்சம் பக்தா்கள் பங்கேற்ற ஒடுக்கு பூஜை நடைபெற்றது.

நள்ளிரவு 12 மணிக்கு பால்குளம் ஸ்ரீகண்டன் சாஸ்தா கோயிலில் இருந்து ஒடுக்கு பூஜைக்கு அம்மனுக்கு படைக்கப்படும் உணவு பதாா்த்தங்களை 15 போ் தலையில் சுமந்து, ஒரே வெள்ளை துணியால் மூடி பவனியாக அம்மன் சந்நிதிக்கு எடுத்து வந்தனா்.

அம்மனுக்கு படைக்கப்படும் உணவு வகைகள் கேரள முறைப்படி சுப நிகழ்ச்சிகளில் வழங்கப்படும் உணவு வகைகளாகும். நள்ளிரவு 12.30 மணிக்கு மேல் 1 மணிக்குள் அம்மனுக்கு இந்த உணவு பதாா்த்தங்கள் படைக்கப்பட்டு ஒடுக்கு பூஜை விமரிசையாக நடைபெற்றது. தொடா்ந்து கோயில் கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெற்றது.