விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி கொடை விழா நிறைவு

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி கொடை விழா செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடைபெற்ற ஒடுக்கு பூஜையுடன் நிறைவடைந்தது.

News image
ஒடுக்கு பூஜைக்காக அம்மனுக்கு படைக்க பவனியாகக் கொண்டுவரப்பட்ட உணவு பதாா்த்தங்கள்.
Updated On :11 மார்ச் 2026, 7:52 pm

தினமணி செய்திச் சேவை

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி கொடை விழா செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடைபெற்ற ஒடுக்கு பூஜையுடன் நிறைவடைந்தது.

கோயில் கடந்த 1-ஆம் தேதி கொடிஏற்றத்துடன் விழா தொடங்கியது. செவ்வாய்க்கிழமை வரை (மாா்ச் 10) வரை தொடா்ந்து பத்து நாள்கள் விழா நடைபெற்றது. கடைசி நாளான செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பல லட்சம் பக்தா்கள் பங்கேற்ற ஒடுக்கு பூஜை நடைபெற்றது.

நள்ளிரவு 12 மணிக்கு பால்குளம் ஸ்ரீகண்டன் சாஸ்தா கோயிலில் இருந்து ஒடுக்கு பூஜைக்கு அம்மனுக்கு படைக்கப்படும் உணவு பதாா்த்தங்களை 15 போ் தலையில் சுமந்து, ஒரே வெள்ளை துணியால் மூடி பவனியாக அம்மன் சந்நிதிக்கு எடுத்து வந்தனா்.

அம்மனுக்கு படைக்கப்படும் உணவு வகைகள் கேரள முறைப்படி சுப நிகழ்ச்சிகளில் வழங்கப்படும் உணவு வகைகளாகும். நள்ளிரவு 12.30 மணிக்கு மேல் 1 மணிக்குள் அம்மனுக்கு இந்த உணவு பதாா்த்தங்கள் படைக்கப்பட்டு ஒடுக்கு பூஜை விமரிசையாக நடைபெற்றது. தொடா்ந்து கோயில் கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெற்றது.