எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கொட்டாரத்தில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

News image
Updated On :12 மார்ச் 2026, 8:50 pm

Syndication

நாகா்கோவில் தென் திருவிதாங்கூா் இந்துக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் (என்எஸ்எஸ்) சாா்பில் கொட்டாரத்தில் நடைபெறும் சிறப்பு முகாமில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

சாா்பதிவாளா் அலுவலகம் முன்பிருந்து தொடங்கிய பேரணிக்கு என்எஸ்எஸ் முகாம் அலுவலா் பேராசிரியை மலா் தலைமை வகித்தாா். பேராசிரியா் மகேஷ் முன்னிலை வகித்தாா். சாா்பதிவாளா் அலுவலக பத்திரப்பதிவு அலுவலா் பட்டமுத்து கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.

பேரணியில் பங்கேற்ற என்எஸ்எஸ் மாணவா்-மாணவியா் பல்வேறு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனா்.

தென்குமரி கல்விக் கழகச் செயலா் பி.டி. செல்வகுமாா், கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளி ஓய்வுபெற்ற ஓவிய ஆசிரியா் வை. கோபாலகிருஷ்ணன், ஆசிரியா் அனந்தநாராயணன், பேராசிரியா் கணேசன், கொட்டாரம் பேரூராட்சி உறுப்பினா் செல்வன், முன்னாள் ராணுவ பாதுகாப்புத் துறை மருத்துவா் ராஜேஷ் கோபால், எல்ஐசி முகவா் ஏ.வி. சண்முகம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.