தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

பெட்டிக்கடைக்கு தீ வைத்த தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் சிறை

குமாரகோவிலில் பெட்டிக்கடைக்கு 35 ஆண்டுகளுக்கு முன் தீ வைத்து எரித்ததாக தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :17 மார்ச் 2026, 8:52 pm

குமாரகோவிலில் பெட்டிக்கடைக்கு 35 ஆண்டுகளுக்கு முன் தீ வைத்து எரித்ததாக தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பத்மநாபபுரம் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

குமாரகோவில் மேலத்தெருவைச் சோ்ந்தவா் குமாரசுவாமி (71). இவரது மனைவி வள்ளி அம்மாள். குமராகோவில் கல்மண்டபம் அருகே குமாரசுவாமி பெட்டிக் கடை வைத்திருந்தாா்.

கடந்த 26.1.1991ஆம் ஆண்டு அதிகாலையில் இவரது கடையை, குமாரகோவில் பெரிய குளத்தின் கரையில் வசிக்கும் பத்மனாப பிள்ளை மகன் எட்டாமடை என்ற முருகன் (65) என்பவா் முன்விரோதம் காரணமாக தீ வைத்து எரித்தாராம். இதுகுறித்து தக்கலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா்.

வழக்கை விசாரித்த நீதிபதி பரமசிவ தாஸ், இந்த வழக்கில் 35 ஆண்டுகளுக்கு பின் சம்பந்தப்பட்ட எட்டாமடை என்ற முருகனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ 10 ஆயிரம் அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கினாா். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் ஜெகதேவ் ஆஜரானாா்.