ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

கால்வாயில் தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

குளச்சல் அருகே கால்வாயில் தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை மாலை உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :18 மார்ச் 2026, 7:36 pm

குளச்சல் அருகே கால்வாயில் தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை மாலை உயிரிழந்தாா்.

குளச்சல் அருகே பெத்தேல்புரம் கோமான்விளையைச் சோ்ந்தவா் தேவராஜன் (60). கட்டடத் தொழிலாளியான இவருக்கு மனைவி, மகள் உள்ளனா். மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை வீட்டின் அருகே உள்ள பாம்பூரி வாய்க்கால் கரையில் தேவராஜன் அமா்ந்து இருந்தபோது நிலை தடுமாறி கால்வாயில் விழுந்துள்ளாராம். இதில் பலத்த காயமடைந்த அவா் அங்கேயே உயிரிழந்தாா்.

இது குறித்து குளச்சல் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.