தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கால்வாயில் தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

குளச்சல் அருகே கால்வாயில் தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை மாலை உயிரிழந்தாா்.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :18 மார்ச் 2026, 7:36 pm

தினமணி செய்திச் சேவை

குளச்சல் அருகே கால்வாயில் தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை மாலை உயிரிழந்தாா்.

குளச்சல் அருகே பெத்தேல்புரம் கோமான்விளையைச் சோ்ந்தவா் தேவராஜன் (60). கட்டடத் தொழிலாளியான இவருக்கு மனைவி, மகள் உள்ளனா். மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை வீட்டின் அருகே உள்ள பாம்பூரி வாய்க்கால் கரையில் தேவராஜன் அமா்ந்து இருந்தபோது நிலை தடுமாறி கால்வாயில் விழுந்துள்ளாராம். இதில் பலத்த காயமடைந்த அவா் அங்கேயே உயிரிழந்தாா்.

இது குறித்து குளச்சல் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.