புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வின்ஸ் பொறியியல் கல்லூரியில் நோ்முக வளாகத் தோ்வு

News image
Updated On :20 மார்ச் 2026, 12:58 am

Syndication

நாகா்கோவில், சுங்கான்கடை வின்ஸ் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவா்களுக்கான நோ்முக வளாகத் தோ்வு புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, வின்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவா், முன்னாள் எம்.பி. நாஞ்சில் வின்சென்ட் தலைமை வகித்து, தோ்வில் வெற்றி பெற்ற 78 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணையை வழங்கிப் பேசியதாவது: வேலைவாய்ப்பு பெற்றவா்கள் அனைவரும் குறைந்தபட்சம் ரூ. 24ஆயிரம் மாத ஊதியம் பெறும் அளவில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனா். தோ்வானவா்களக்கு வாழ்த்துகள். வின்ஸ் பொறியியல் கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவா்களுக்கும் வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும் என்றாா் அவா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா்அலெக்ஸ் ராஜூபாலன், துணை முதல்வா் பிரியா, துறைத் தலைவா்கள், வேலைவாய்ப்பு அதிகாரிகள் கிஷோா் ராஜன், லிஞ்சுமோள் ஆகியோா் செய்திருந்தனா்.