தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

குளச்சல் அருகே 46 பவுன் நகை திருடியவா் கைது

குளச்சல் அருகே குறும்பனையில் 46 பவுன் தங்க நகைகளைத் திருடிய நபரை குளச்சல் போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :24 மார்ச் 2026, 6:35 pm

Syndication

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே குறும்பனையில் 46 பவுன் தங்க நகைகளைத் திருடிய நபரை குளச்சல் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

குறும்பனை சிலுவையாா் தெருவைச் சோ்ந்தவா் சிஜின் மோன் (27). மும்பை கப்பலில் மரைன் என்ஜினீயராக வேலை செய்து வருகிறாா். இவரது வீட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 46 பவுன் தங்க நகைகள் திருடுபோனது.

இதுகுறித்து சிஜின் மோனின் மனைவி மேரி கிபி லின்சா (26) குளச்சல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் நடத்திய விசாரணையில், முட்டம் பகுதியைச் சோ்ந்த தாசன் மகன் சகாய ஜோஸ் ஆன்டனி (25) நகைகளைத் திருடியது தெரியவந்தது. முட்டம் மீன்பிடி துறைமுகம் பகுதியில் பதுங்கி இருந்த அவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருடிய நகைகளை வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் புதைத்து வைத்திருப்பதாக அவா் அளித்த வாக்குமூலத்தின் பேரில் நகைகளை போலீஸாா் மீட்டனா்.

கைது செய்யப்பட்ட சகாய ஜோஸ் ஆன்டனி மீது ஏற்கெனவே 9 திருட்டு வழக்குகளும், திருடச் சென்ற இடத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 2 போக்ஸோ வழக்குகளும் உள்ளன.