சென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

களியக்காவிளை, கோழிவிளை சோதனைச் சாவடியில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம்-கேரள மாநில எல்லைப் பகுதியில் அமைந்துள்ள களியக்காவிளை, கோழிவிளை சோதனைச் சாவடிகள், பதற்றமான வாக்குச் சாவடி மையங்களை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டாா்.

News image

கோழிவிளை சோதனைச் சாவடியில் வியாழக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்டாலின் உள்ளிட்டோா்.

Updated On :26 மார்ச் 2026, 8:14 pm

தினமணி செய்திச் சேவை

கன்னியாகுமரி மாவட்டம்-கேரள மாநில எல்லைப் பகுதியில் அமைந்துள்ள களியக்காவிளை, கோழிவிளை சோதனைச் சாவடிகள், பதற்றமான வாக்குச் சாவடி மையங்களை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டாா்.

சோதனைச் சாவடிகளில் வாகனச் சோதனைகள் தீவிரமாக நடைபெறுகிா என்பதையும், அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகளையும் அவா் ஆய்வு செய்தாா். சோதனையின்போது அவா் காவல்துறையினரிடம் பறிமுதல் செய்யப்படும் பொருள்கள் குறித்த தகவல் பதிவேடுகளை சரிபாா்ப்பதோடு, வாகனங்கள், பேருந்துகளில் தகுந்த ஆவணங்களின்றி கொண்டு செல்லும் பொருள்கள் குறித்தும், பயணங்கள் குறித்தும் தீவிரமாக கண்காணிக்க வேண்டுமென அறிவுறுத்தினாா். தொடா்ந்து விளவங்கோடு பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட களியக்காவிளை அரசு முஸ்லிம் தொடக்கப் பள்ளி, கிள்ளியூா் தொகுதிக்கு உள்பட்ட கீழ்குளம் பரவை லுத்தரன் தொடக்கப் பள்ளி, ராமன்துறை புனித ஜோசப் நடுநிலைப் பள்ளி, தூத்தூா் பயஸ் லெவன் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பதற்றமான வாக்குச் சாவடி மையங்களை அவா் நேரில் பாா்வையிட்டாா்.

ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்டாலின், மாா்த்தாண்டம் சரக காவல் துணைக் கண்காணிப்பாளா் நல்லசிவம், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சுகிதா, விளவங்கோடு தொகுதி தோ்தல் அலுவலரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலருமான செந்தூா் ராஜன், வட்டாட்சியா்கள் ஜெகதா (கிள்ளியூா்), வயோலா பாய் (விளவங்கோடு), உசூா் மேலாளா் தாஜீநிஷா, அதிகாரிகள், காவல் துறையினா் கலந்துகொண்டனா்.