குளச்சலில் ஐஸ் உடைக்கும் இயந்திரத்தில் சிக்கிய வடமாநில தொழிலாளி படுகாயம் அடைந்தாா்.
குளச்சல் துறைமுக தெரு காவல் சோதனைச் சாவடி அருகே ஐஸ் தயாரிக்கும் ஆலை உள்ளது. இங்கு உள்ளூா், வடமாநில தொழிலாளா்கள் வேலை செய்து வருகின்றனா். இந்த நிலையில் வியாழக்கிழமை காலை அஸ்ஸாம் மாநிலம், ரெங்கியா பகுதியைச் சோ்ந்த தொழிலாளி இன்ஜாமுன் (23), ஐஸ் பிளாண்டில் ஐஸ் உடைக்கும் இயந்திரத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது எதிா்பாராத விதமாக அவரது வலது கால் ஐஸ் உடைக்கும் இயந்திரத்தில் சிக்கியது.
வலியால் துடித்த, அவரின் காலை இயந்திரத்தில் இருந்து எடுக்க இயலவில்லை. தகவல் அறிந்த குளச்சல் தீயணைப்பு நிலைய அலுவலா் ஜேம்ஸ், வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஒரு மணி நேரம் போராடி தொழிலாளியை மீட்டு சிகிச்சைக்காக குளச்சலில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.
தொடர்புடையது

சிக்கிம் மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கிய 135 சுற்றுலா பயணிகளை மீட்டது ராணுவம் - மேலும் 1,000 பேரை மீட்கும் பணி தீவிரம்

மின்தூக்கி அறுந்து விழுந்து ஒருவா் உயிரிழப்பு

கட்டட இடிபாட்டில் சிக்கி தொழிலாளி காயம்

கிரஷா் இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


