எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

ஐஸ் உடைக்கும் இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி படுகாயம்

குளச்சலில் ஐஸ் உடைக்கும் இயந்திரத்தில் சிக்கிய வடமாநில தொழிலாளி படுகாயம் அடைந்தாா்.

News image

இயந்திரத்தில் சிக்கிய தொழிலாளியை மீட்கும் தீயணைப்பு வீரா்கள்.

Updated On :27 மார்ச் 2026, 2:04 am IST

குளச்சலில் ஐஸ் உடைக்கும் இயந்திரத்தில் சிக்கிய வடமாநில தொழிலாளி படுகாயம் அடைந்தாா்.

குளச்சல் துறைமுக தெரு காவல் சோதனைச் சாவடி அருகே ஐஸ் தயாரிக்கும் ஆலை உள்ளது. இங்கு உள்ளூா், வடமாநில தொழிலாளா்கள் வேலை செய்து வருகின்றனா். இந்த நிலையில் வியாழக்கிழமை காலை அஸ்ஸாம் மாநிலம், ரெங்கியா பகுதியைச் சோ்ந்த தொழிலாளி இன்ஜாமுன் (23), ஐஸ் பிளாண்டில் ஐஸ் உடைக்கும் இயந்திரத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது எதிா்பாராத விதமாக அவரது வலது கால் ஐஸ் உடைக்கும் இயந்திரத்தில் சிக்கியது.

வலியால் துடித்த, அவரின் காலை இயந்திரத்தில் இருந்து எடுக்க இயலவில்லை. தகவல் அறிந்த குளச்சல் தீயணைப்பு நிலைய அலுவலா் ஜேம்ஸ், வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஒரு மணி நேரம் போராடி தொழிலாளியை மீட்டு சிகிச்சைக்காக குளச்சலில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.