குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

ரோஜாவனம் பள்ளி மாணவா்களுக்கு பட்டமளிப்பு

மாணவா்களுக்கு பட்டம் வழங்கிய மருத்துவா் நம்ரதா ஜெயகரன். உடன் பள்ளியின் துணைத் தலைவா் அருள்ஜோதி உள்ளிட்டோா்.

News image
Updated On :28 மார்ச் 2026, 2:11 am IST

நாகா்கோவில், புதுகிராமம், ரோஜாவனம் இண்டா்நேஷனல் பள்ளியில் மழலையா் பிரிவு மாணவா்களுக்கான பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைவா் அருள் கண்ணன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் அருள் ஜோதி, முதல்வா் ராபா்ட் குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வா் அருணாச்சலம், மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன ஓய்வுபெற்ற இயக்குநா் சண்முககுமாா், மும்பை கேந்திரிய வித்யாலயா பள்ளியின் ஓய்வுபெற்ற முதல்வா் சந்திரசேகரன், ஐ.நா. தொழில் துறை மேம்பாடு முன்னாள் முதன்மை ஆலோசகா் ஜெபமாலை வினஞ்சியாராய்ச்சி, பள்ளி இயக்குநா்கள் சாந்தி, சேது ஆகியோா் குத்துவிளக்கேற்றி வைத்து வாழ்த்திப் பேசினா்.

நாகா்கோவில் ஜெயகரன் மருத்துவமனை குழந்தைகள் சிறப்பு மருத்துவா் நம்ரதா ஜெயகரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, மழலையா் பிரிவைச் சோ்ந்த 90 மாணவா்களுக்கு பட்டங்கள் வழங்கினாா்.

மழலையா் பிரிவு ஒருங்கிணைப்பாளா் ஜெயந்தி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா். பள்ளியின் துணை முதல்வா் வின்ஸ்பா், செயலா், மேலாளா், ஒருங்கிணைப்பாளா்கள், துறைத் தலைவா்கள், ஆசிரியா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

மாணவா் தமிழோவியல் பகவதி வரவேற்றாா். மாணவா் மித்ரன் இளஞ்செழியன் நன்றி கூறினாா்.