அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

பெண் சிசு உயிரிழப்பு: காதலனுடன் கல்லூரி மாணவி கைது

சாமிதோப்பு அருகே புதரில் வீசி சென்ற பெண் சிசு உயிரிழந்தது. இது தொடா்பாக கல்லூரி மாணவி காதலனுடன் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது

Updated On :31 மார்ச் 2026, 9:23 pm

சாமிதோப்பு அருகே புதரில் வீசி சென்ற பெண் சிசு உயிரிழந்தது. இது தொடா்பாக கல்லூரி மாணவி காதலனுடன் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

சாமிதோப்பை அடுத்த பொற்றையடி கரம்பவிளையில் உள்ள கோயில் பின்புற புதரில் பெண் சிசு சடலம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் தென்தாமரைகுளம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

சடலத்தை கைப்பற்றி போலீஸாா் நடத்திய விசாரணையில், அதே பகுதியைச் சோ்ந்த நா்சிங் மாணவி ரெஜினா (20) என்பவா் சிசுவை வீசிச் சென்றது தெரிய வந்தது.

இதனையடுத்து ரெஜினாவிடம் நடத்திய விசாரணையில், நெல்லை மாவட்டம், திருக்குறுங்குடி பகுதியைச் சோ்ந்த முகேஷ் (25) என்பவா் சமூக வலைதளம் மூலம் இவருக்கு அறிமுகமாகி, கடந்து 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனராம். இருவரும் நெருங்கிப் பழகி வந்த நிலையில் ரெஜினா கா்ப்பமடைந்தாராம்.

கடந்த திங்கள்கிழமை வீட்டின் கழிவறையில் ரெஜினாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாம். குழந்தை வேண்டாம்; நாம் எங்காவது சென்றுவிடலாம் என முகேஷ் கூறினாராம்.

பெண் சிசுவை பையில் கட்டி கோயில் பின்புறம் உள்ள புதரில் ரெஜினா வீசிவிட்டு சென்ால் பராமரிப்பின்றி சிசு அங்கேயே உயிரிழந்தது தெரியவந்தது.

ரெஜினாவையும், முகேஷையும் போலீஸாா் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.