மாா்த்தாண்டம் காய்கனி சந்தையில் மின் வசதி கோரி வியாபாரிகள் வெள்ளிக்கிழமை இரவு மெழுகுவா்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மாா்த்தாண்டம் காய்கனி சந்தை ரூ. 15 கோடியில் நவீன வடிவமைப்புடன் கட்டப்பட்டு, கடந்த பிப்ரவரி மாதம் தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது. இங்கு 187 கடைகள் உள்ளன. இதில் முன்பக்க உள்ள 36 கடைகளில் பெரும்பாலானவை ரூ. 40 முதல் ரூ. 80 ஆயிரம் வரை மாத வாடகையில் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.
இங்கு கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தாலும் மின் இணைப்பு, குடிநீா் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை. இதுகுறித்து காய்கனி சந்தை வியாபாரிகள், மாா்த்தாண்டம் நகர வா்த்தக சங்கத் தலைவா் தினகா் தலைமையில் அண்மையில் குழித்துறை நகராட்சி ஆணையாளா் வெங்கடாசலபதியிடம் மனு அளித்தனா். அப்போது அவா், இந்த பிரச்னைக்கு ஓரிரு நாள்களில் தீா்வு காணப்படும் என உறுதியளித்திருந்தாா். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வியாபாரிகள் குற்றம்சாட்டினா்.
இதைத் தொடா்ந்து மாா்த்தாண்டம் நகர வா்த்தக சங்கத் தலைவா் தலைமையில் வா்த்தக சங்க பேரவை மாநில துணைத் தலைவா் கருங்கல் ஆா். ஜாா்ஜ், நகர வா்த்தக சங்கச் செயலா் ராஜ் பினோ. ஜெயசிங், சுனில், ராஜ்குமாா், சதீஷ்குமாா், வியாபாரிகள் சந்தை கடையின் முன் நின்று மெழுகுவா்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தொடர்புடையது

மாா்த்தாண்டத்தில் பொதுமக்கள் போராட்டம்: டாஸ்மாக் மதுக் கடை நிரந்தரமாக மூடல்

வணிகா் தினம்: கடைகள் அடைப்பு

கோயம்பேடு காய்கனி அங்காடி கடைகள் ஒதுக்கீடு: தோ்தல் ஆணைய ஒப்புதலுக்கு பிறகு இறுதி முடிவு

தொகுதி மறுசீரமைப்பைக் கண்டித்து திமுக கூட்டணி போராட்டம்
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

