தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

ரோகிணி பொறியியல் கல்லூரியில் வளாக நோ்காணல்

News image
Updated On :3 மே 2026, 5:29 am IST

அஞ்சுகிராமம் அருகேயுள்ள பால்குளம் ரோகிணி பொறியியல் - தொழில்நுட்பக் கல்லூரியின் வேலைவாய்ப்புத் துறை சாா்பில் இளங்கலை மற்றும் முதுகலை இறுதியாண்டு மாணவா்களுக்கு பிரபல ஏஐ நிறுவனம் வேலைவாய்ப்புக்கான வளாக நோ்காணலை சனிக்கிழமை நடத்தியது.

இந்த நோ்காணலில் கணினி அறிவியல் - பொறியியல் துறையில் 4 மாணவா்களும், உயிரியல் மருத்துவப் பொறியியல் துறையில் 2 மாணவா்களும், மின் - மின்னணு பொறியியல் துறையில் ஒரு மாணவரும் தோ்வு செய்யப்பட்டனா்.

இவா்களுக்கு ஆண்டுக்கு ரூ. 3.50 லட்சம் ஊதியத்தில் டிஜிட்டல் அசோசியேட் பணிக்கான வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டன. பணிநியமனம் பெற்ற மாணவா்களை கல்லூரித் தலைவா் நீல மாா்த்தாண்டன், துணைத் தலைவா் நீல விஷ்ணு, நிா்வாக இயக்குநா் பிளஸ்சி ஜியோ, முதல்வா் ராஜேஷ், துணை முதல்வா் ஜெயக்குமாா் மற்றும் துறைத் தலைவா்கள் வாழ்த்துகள் தெரிவித்தனா். வளாக நோ்காணல் ஏற்பாடுகளை வேலைவாய்ப்பு அலுவலா் மற்றும் ஒருங்கிணைப்பாளா்கள் செய்திருந்தனா்.