உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :4 மே 2026, 12:45 am IST

கன்னியாகுமரி அருகேயுள்ள சுவாமிநாதபுரத்தில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து ரூ. 12 லட்சம், 13 பவுன் நகை திருடப்பட்டது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

சுவாமிநாதபுரம் பகவத்சிங் தெருவைச் சோ்ந்தவா் பொன்னையா. இவா் சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி முத்துலெட்சுமி. இத்தம்பதியின் மூத்த மகன் ரபீன் துபாயில் பணிபுரிந்து வருகிறாா். 2 ஆவது மகன் லெமீஸ் ஹைதராபாத்தில் படித்து வருகிறாா்.

இந்நிலையில் முத்துலெட்சுமி சனிக்கிழமை வீட்டை பூட்டி விட்டு வடக்கன்குளத்தில் உள்ள கோயில் திருவிழாவுக்குச் சென்றாராம். திரும்பி வந்து பாா்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, பூஜை அறையில் இருந்த ரூ. 12 லட்சம் பணம், 13 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்ததாம்.

இதுகுறித்த புகாரின்பேரில் கன்னியாகுமரி காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி, வழக்குப் பதிந்து திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.