ஈரான் மோசமாக நடந்துகொண்டால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் - டிரம்ப் எச்சரிக்கைஓராண்டில் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்ததாக 12.24 லட்சம் வழக்குகள் - ரூ. 65.16 கோடி அபாரதம்தமிழகத்தில் 14 இடங்களில் வெய்யில் சதம்: இன்று பலத்த மழைக்கும் வாய்ப்புஅருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்சென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்இடதுசாரிகளை வீழ்த்தியது போல திரிணமூலை வீழ்த்துவோம்: பாஜக சுவேந்து அதிகாரிவாக்குத் திருட்டுக்கு வாய்ப்பில்லை: மேற்கு வங்க தேர்தல் ஆணையம்வாக்கு எண்ணிக்கை: தயார் நிலையில் மேற்கு வங்கம் - தலைமைத் தேர்தல் அதிகாரிஉலக பத்திரிகை சுதந்திர குறியீட்டு பட்டியலில் இந்தியா தொடர் சரிவு! கார்கே விமர்சனம்
/

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :3 மே 2026, 7:15 pm

கன்னியாகுமரி அருகேயுள்ள சுவாமிநாதபுரத்தில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து ரூ. 12 லட்சம், 13 பவுன் நகை திருடப்பட்டது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

சுவாமிநாதபுரம் பகவத்சிங் தெருவைச் சோ்ந்தவா் பொன்னையா. இவா் சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி முத்துலெட்சுமி. இத்தம்பதியின் மூத்த மகன் ரபீன் துபாயில் பணிபுரிந்து வருகிறாா். 2 ஆவது மகன் லெமீஸ் ஹைதராபாத்தில் படித்து வருகிறாா்.

இந்நிலையில் முத்துலெட்சுமி சனிக்கிழமை வீட்டை பூட்டி விட்டு வடக்கன்குளத்தில் உள்ள கோயில் திருவிழாவுக்குச் சென்றாராம். திரும்பி வந்து பாா்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, பூஜை அறையில் இருந்த ரூ. 12 லட்சம் பணம், 13 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்ததாம்.

இதுகுறித்த புகாரின்பேரில் கன்னியாகுமரி காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி, வழக்குப் பதிந்து திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.