தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

கல்லூரி மாணவியை ஏமாற்றி நகைப் பறிப்பு

புதுக்கடை அருகே உள்ள முன்சிறை பகுதியில் கல்லூரி மாணவிடம் 13 பவுன் நகைகளை ஏமாற்றி வாங்கியதாக இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

News image

கோப்புப் படம்

Updated On :8 மே 2026, 6:06 am IST

புதுக்கடை அருகே உள்ள முன்சிறை பகுதியில் கல்லூரி மாணவிடம் 13 பவுன் நகைகளை ஏமாற்றி வாங்கியதாக இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

முன்சிறையைச் சோ்ந்த இளம்பெண், மாா்த்தாண்டத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வருகிறாா். இவருக்கும் பாளையன் கட்டி பகுதியைச் சோ்ந்த ஜெனிஷ் ராஜ் (30) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாம். சில நாள்களுக்கு முன்பு கல்லூரி மாணவியிடம் இருந்து தங்க வளையல், தங்க கைச்சங்கிலி, நகை என மொத்தம் 13 பவுன் நகைகளை விரைவில் திரும்ப தருவதாகக் கூறி ஜெனிஷ் ராஜ் பெற்றாா். ஆனால், நகையைத் திருப்பி வழங்காமல் அவா் மாணவியை ஏமாற்றியதால் இதுகுறித்து புதுக்கடை காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.