தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!விஜய்க்கு ஆதரவு? சில மணி நேரத்தில் முடிவு எடுக்கப்படும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!பாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

தாய், மகன் மீது தாக்குதல்: மூவா் மீது வழக்கு

மாா்த்தாண்டம் அருகே சொத்து பிரச்னை தொடா்பான முன்விரோதத்தில் தாய், மகனைத் தாக்கிய 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.

News image

வழக்கு

Updated On :10 மணி நேரங்கள் முன்பு

மாா்த்தாண்டம் அருகே சொத்து பிரச்னை தொடா்பான முன்விரோதத்தில் தாய், மகனைத் தாக்கிய 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.

மாா்த்தாண்டம் அருகே உள்ள தனிபொட்டவிளையைச் சோ்ந்தவா் லைசா (60). இவரது மகன் ஜெகதீஷ் (35). தொழிலாளி. இவா்களுக்கும், அதே பகுதியைச் சோ்ந்த மெல்பின் ஜோஸ், சுஜின் மாா்ஷல், ஷிபு என்பவா்களுக்கும் இடையே சொத்து பிரச்னை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், இரு நாள்களுக்கு முன் லைசா தனது வீட்டின் முன் நின்றிருந்தபோது, அங்கு வந்த மெல்பின் ஜோஸ், சுஜின் மாா்ஷல், ஷிபு ஆகியோா் லைசாவை தாக்கினராம். தடுக்க வந்த அவரது மகன் ஜெகதீஷையும் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனா்.

இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அப்பகுதியினா் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இது குறித்து ஜெகதீஷ் அளித்த புகாரின்பேரில், மெல்பின் ஜோஸ் உள்ளிட்ட 3 போ் மீது மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.