பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு 30 ஆண்டுகள் சிறை

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 30ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

மாா்த்தாண்டம் அருகேயுள்ள, மருதங்கோடு, மடத்துவிளை வீடு பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் மகன் ரெஜி(46), தொழிலாளி. இவா் கடந்த 2020 ஆம் ஆண்டு 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தாராம்.

இதுகுறித்து,சிறுமியின் பெற்றோா் மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ரெஜியை கைது செய்தனா்.

இது தொடா்பான வழக்கு, நாகா்கோவில் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரையா இக்குற்றத்தில் ஈடுபட்ட ரெஜிக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.13 ஆயிரம் அபராதம் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பு கூறினாா்.

இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர காரணமாக இருந்த மாா்த்தாண்டம் துணை காவல் கண்காணிப்பாளா் மற்றும் அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின் பாராட்டினாா்.