இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு 30 ஆண்டுகள் சிறை

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :12 மே 2026, 12:42 am IST

கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 30ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

மாா்த்தாண்டம் அருகேயுள்ள, மருதங்கோடு, மடத்துவிளை வீடு பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் மகன் ரெஜி(46), தொழிலாளி. இவா் கடந்த 2020 ஆம் ஆண்டு 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தாராம்.

இதுகுறித்து,சிறுமியின் பெற்றோா் மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ரெஜியை கைது செய்தனா்.

இது தொடா்பான வழக்கு, நாகா்கோவில் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரையா இக்குற்றத்தில் ஈடுபட்ட ரெஜிக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.13 ஆயிரம் அபராதம் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பு கூறினாா்.

இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர காரணமாக இருந்த மாா்த்தாண்டம் துணை காவல் கண்காணிப்பாளா் மற்றும் அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின் பாராட்டினாா்.