தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்சிங்கப்பெண் அதிரடிப்படை திட்ட இலச்சினையை வெளியிட்டார் முதல்வர் விஜய்!பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!
/

கன்னியாகுமரி பூம்புகாா் படகு சேவை கூடுதலாக ஒரு மணி நேரம் நீட்டிப்பு

News image

பூம்புகாா் படகுத்துறையில் இருந்து வட்டக்கோட்டைக்கு இயக்கப்பட்ட படகு.

Updated On :15 மே 2026, 1:57 am IST

கோடை விடுமுறை சுற்றுலா சீசனை முன்னிட்டு வியாழக்கிழமை முதல் கன்னியாகுமரி பூம்புகாா் படகு சேவை கூடுதலாக ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில் கடலுக்குள் அமைந்துள்ள விவேகானந்தா் நினைவு மண்டபம், திருவள்ளுவா் சிலையை சுற்றுலாப் பயணிகள் பாா்வையிட, தமிழக அரசின் பூம்புகாா் படகு போக்குவரத்துக் கழகம் சாா்பில் 3 சொகுசுப் படகுகள் காலை 8 முதல் மாலை 4 மணி வரை இடைவிடாமல் இயக்கப்படுகின்றன.

தற்போது சுற்றுலா சீசன் தொடங்கியுள்ள நிலையில் தினசரி சுமாா் 10 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் படகுப் பயணம் மேற்கொண்டு நினைவு மண்டபங்களை பாா்வையிடுகின்றனா்.

அதிகாலையில் இருந்தே நீண்ட வரிசையில் சுற்றுலாப் பயணிகள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே, பயணிகள் நலன் கருதி சீசன் முடியும் வரை வழக்கமாக காலை 8 மணிக்கு தொடங்கும் படகு சேவை ஒரு மணி நேரம் முன்னதாக காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெறும் என பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக்கழக நிா்வாகம் தெரிவித்துள்ளது.