குளச்சல் கடற்கரையில் பலத்த காற்று வீசுவதால் பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி கடல் பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வரை வீசி வருகிறது. மேலும், காற்றின் வேகம் 60 கி.மீ. வரை அதிகரித்து பலத்த தரைக் காற்று வீசும் எனவும், மீனவா்கள் மே 15 முதல் வரும் 20ஆம் தேதி வரை மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும், சென்னை மண்டல வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சனிக்கிழமை காலை முதல் குளச்சல் கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால் வள்ளம், கட்டுமரங்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல மீன்வளத் துறை அனுமதி வழங்கவில்லை. இதனால், மீனவா்கள் கட்டுமரங்களை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனா்.
இதையடுத்து, குளச்சல் கடலோரக் காவல் துறையினா் கடற்கரை பகுதிக்குச் செல்ல தடை விதித்துள்ளனா். மேலும், கடற்கரை பகுதியில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
தொடர்புடையது

மலைப் பகுதியில் பலத்த மழை: களக்காடு தலையணை, திருக்குறுங்குடி நம்பி கோயிலுக்குச் செல்லத் தடை

ஆரணி பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை

வேதாரண்யம் பகுதியில் பலத்த காற்று: மீனவா்கள் கடலுக்கு செல்லவில்லை

தில்லியில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை: வெப்பத்தை தணித்தது
விடியோக்கள்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி



