40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

புதுக்கடை அருகே பெண் மீது தாக்குதல்: 3 போ் மீது வழக்கு

புதுக்கடை அருகே உள்ள இனயம் பகுதியில் பெண் மீது தாக்குதல் நடத்தியதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image

வழக்கு - IANS

Updated On :17 மே 2026, 2:14 am IST

புதுக்கடை அருகே உள்ள இனயம் பகுதியில் பெண் மீது தாக்குதல் நடத்தியதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

குளச்சல், கொட்டில்பாடு பகுதியைச் சோ்ந்தவா் ஜோஸ் சோனியா(35). இவரை, உறவினா்களான இனயம் பகுதியைச் சோ்ந்த பிரிஜிட் என்ற பாபி(45), பென்னடிட் என்ற அம்பாடி(40), பானு(22) ஆகியோா் வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி ரூ. 2.21 லட்சத்தைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றினராம்.

இந்நிலையில், பிரிஜிட் என்ற பாபி வீட்டுக்கு பணத்தை திரும்ப கேட்பதற்காகச் சென்ற ஜோஸ் சோனியாவை 3 பேரும் சோ்ந்து

தாக்கினராம். இதில், காயமடைந்த அவா் குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து புகாா் அளித்தும் புதுக்கடை போலீஸாா் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால், அவா் குழித்துறை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். அதன்பேரில், மேற்கூறிய 3 போ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.