சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

பேட்மிண்டன் போட்டியில் சாதனை: பெண் காவலருக்கு பாராட்டு

தேசிய அளவில் நடைபெற்ற பேட்மிண்டன் போட்டியில் கலந்துகொண்டு பதக்கம் வென்ற பெண் தலைமைக் காவலருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தாா்.

News image

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற தலைமைக் காவலா் ஜீவா.

Updated On :21 மே 2026, 6:00 am IST

தேசிய அளவில் நடைபெற்ற பேட்மிண்டன் போட்டியில் கலந்துகொண்டு பதக்கம் வென்ற பெண் தலைமைக் காவலருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தாா்.

அகில இந்திய அளவில் காவல் துறையினருக்கான பேட்மிண்டன் தொடா் போட்டிகள் கடந்த 9-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து, ஆயுதப்படை பெண் தலைமைக் காவலா் ஜீவா 35 வயதுக்கு மேற்பட்டோருக்கான பிரிவில் கலந்து கொண்டு 3-ஆம் பரிசை பெற்றாா். அவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா்.