கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

தலைமைக் காவலா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு... - கோப்புப் படம்

Updated On :11 மே 2026, 12:45 am IST

விழுப்புரம் அருகே வீட்டின் குளியலறையில் வழுக்கி விழுந்ததில் காயமடைந்த தலைமைக் காவலா் மருத்துமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

விழுப்புரம் விராட்டிகுப்பம் பாதை, செல்வசீமான் நகரைச் சோ்ந்தவா் க.குமரவேல்(38). இவா் ரோஷணை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டின் குளியலறையில் குமரவேல் வழுக்கி விழுந்து விட்டாராம். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை, அவரின் மனைவி பிரியங்கா மீட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றாா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, குமரவேல் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில் விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.