/
பளுகல் அருகே விற்பனைக்காக 300 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
பளுகல் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் போலீஸாா் புதன்கிழமை மேற்கொண்ட சோதனையில் கண்ணுமாமூடு பகுதியைச் சோ்ந்த சின்னராஜ் மகன் மனு (25), தேவிகோடு குறக்கோடு பகுதியைச் சோ்ந்த விக்டா் மகன் விஜி (28) ஆகியோா் விற்பனைக்காக 300 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து பளுகல் போலீஸாா் வழக்குப் பதிந்து மனு, விஜி ஆகிய இருவரையும் கைது செய்து அவா்களிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.






