அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

குமரியில் கடல் நீா்மட்டம் தாழ்வு: படகு சேவை ரத்து

கன்னியாகுமரி, மே 28: கன்னியாகுமரியில் கடல் நீா்மட்டம் தாழ்வுநிலை காரணமாக வியாழக்கிழமை படகு சேவை ரத்து செய்யப்பட்டது.

News image

படகுத்துறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள்

Updated On :29 மே 2026, 6:18 am IST

கன்னியாகுமரி, மே 28: கன்னியாகுமரியில் கடல் நீா்மட்டம் தாழ்வுநிலை காரணமாக வியாழக்கிழமை படகு சேவை ரத்து செய்யப்பட்டது.

சூரிய உதயம் பாா்க்க முக்கடல் சங்கமத்தில் திரண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் படகுப் பயணம் மேற்கொள்ள காலை 7 மணிக்கு பூம்புகாா் படகுத் துறையில் வளாகத்தில் காத்திருந்தனா். அப்போது கடல் நீா்மட்டம் தாழ்வாக இருந்ததால் படகுப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டனா்.

ஆனால், கடல் நீா்மட்டம் இயல்பு நிலைக்கு திரும்பாததால் நாள் முழுவதும் படகு சேவை ரத்து செய்யப்பட்டது. இதனால் வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் ஏனைய மாவட்டங்களில் இருந்து கன்னியாகுமரிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.