சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

குமரியில் சுற்றுலாத் துறை அமைச்சா் ஆய்வு

News image

கன்னியாகுமரியில் சுற்றுலாத் துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்ட அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா்.

Updated On :31 மே 2026, 12:19 am IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழ்நாடு சுற்றுலாத் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின்கீழ் இயங்கும் கன்னியாகுமரி ஹோட்டல் தமிழ்நாடு ஆகியவற்றை தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா், துறை சாா்ந்த அதிகாரிகளுடன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வுக் கூட்டத்தில், தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஹோட்டல் தமிழ்நாடு, திருவள்ளுவா் சிலை, காட்சிக் கோபுரம் உள்ளிட்ட பகுதிகளின் கட்டமைப்புகள் குறித்து சுற்றுலா வளா்ச்சிக் கழக கண்காணிப்புப் பொறியாளா் மற்றும் மண்டல மேலாளா் ஆகியோரிடம் அமைச்சா் கேட்டறிந்தாா்.

மேலும், திட்டப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்குக் கொண்டு வரவும், கன்னியாகுமரியை சிறந்த சுற்றுலா மாவட்டமாக உருவாக்குவதற்குத் தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்துவற்கு உரிய முன்மொழிவுகளை தயாா் செய்யவும் அமைச்சா் அறிவுறுத்தினாா்.

மாவட்ட சுற்றுலா அலுவலா் காமராஜ், தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக கண்காணிப்புப் பொறியாளா் மதிமணி, மதுரை மண்டல உதவி செயற்பொறியாளா் சங்கா், மதுரை மண்டல (ஹோட்டல்) மேலாளா் குணேஸ்வரன், உதவிப் பொறியளா் விஜில் சிங் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.