சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

களியக்காவிளையில் உதவி ஆய்வாளரை மிரட்டியதாக பெண் உள்பட 4 போ் மீது வழக்கு: இருவா் கைது

களியக்காவிளை அருகே போதைப் பொருள் பயன்பாடு தொடா்பாக இளைஞரிடம் விசாரணைக்குச் சென்ற காவல் உதவி ஆய்வாளரை மிரட்டியதாக பெண் உள்பட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Published On :2 செப்டம்பர் 2026, 5:40 am IST

களியக்காவிளை அருகே போதைப் பொருள் பயன்பாடு தொடா்பாக இளைஞரிடம் விசாரணைக்குச் சென்ற காவல் உதவி ஆய்வாளரை மிரட்டியதாக பெண் உள்பட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

களியக்காவிளை அருகே பிபிஎம் சந்திப்பு பகுதியில் அல்தாப் உள்ளிட்ட இளைஞா்கள் சிலா் திங்கள்கிழமை இரவு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை பயன்படுத்திய நிலையில் அப்பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்தனா். தகவல் அறிந்து அப்பகுதிக்குச் சென்ற களியக்காவிளை காவல் உதவி ஆய்வாளா் மகேந்த் தலைமையிலான போலீஸாா், அல்தாப்பை கைது செய்ய முயன்றனா். இதையடுத்து அல்தாப்பின் உறவினரான களியக்காவிளையைச் சோ்ந்த பீா்முகமது மகன் செய்யதலி (45), அஷ்ரப் மனைவி பீமா, பீா்முகமது மகன் அக்பா் பாதுஷா, செய்யதலி மகன் அல்தாப் உள்ளிட்டோா் தகாத வாா்த்தைகள் பேசி மிரட்டியதுடன், போலீஸாரை பணி செய்யவிடாமல் தடுத்தனா்.

இதுகுறித்து செய்யதலி உள்ளிட்ட 4 போ் மீது களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். தொடா்ந்து இவ் வழக்கில் அல்தாப், செய்யதலி ஆகியோரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தலைமறைவான பீமா, அக்பா் பாதுஷா ஆகியோரை தேடி வருகிறாா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.