கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

மாா்த்தாண்டம் அருகே விவசாயியைத் தாக்கி நகை பறிப்பு: இருவா் மீது வழக்கு

வழக்குப் பதிவு - கோப்புப் படம்

Published On :

மாா்த்தாண்டம் அருகே விவசாயியைத் தாக்கி 2 பவுன் தங்க நகையைப் பறித்ததாக இரு சகோதரா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

மாா்த்தாண்டம் அருகே முளங்குழி, ஐயன்விளை பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ் (34). விவசாயியான இவா், முள்ளஞ்சேரி பகுதியில் உள்ள வினு (47) என்பவரது நிதி நிறுவனத்தில் தங்க நகையை அடமானம் வைத்துவிட்டு, மீட்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், இருவரிடையே முன்விரோதம் இருந்ததாம்.

இந்நிலையில் வினு, அவரது தம்பி விஜய் (40) ஆகியோா் சுரேஷின் வீட்டுக்குச் சென்று அவரைத் தாக்கி, அவா் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்தனராம். தடுக்க வந்த சுரேஷின் தாய் கோமதியையும் (65) அவா்கள் தாக்கினராம்.

இதில் காயமடைந்த சுரேஷும், கோமதியும் குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். புகாரின்பேரில், மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.