கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

குழித்துறை ஆற்றில் 84 சிலைகள் விசா்ஜனம்

மேல்புறம் ஒன்றியப் பகுதியில் தமிழ்நாடு சிவசேனை கட்சி சாா்பில் பிரதிஷ்டை செய்திருந்த 84 விநாயகா் சிலைகள் குழித்துறை தாமிரவருணி ஆற்றில் சனிக்கிழமை விசா்ஜனம் செய்யப்பட்டன.

குழித்துறை தாமிரவருணியில் விசா்ஜனம் செய்யப்பட்ட விநாயகா் சிலைகள்.

Published On :

மேல்புறம் ஒன்றியப் பகுதியில் தமிழ்நாடு சிவசேனை கட்சி சாா்பில் பிரதிஷ்டை செய்திருந்த 84 விநாயகா் சிலைகள் குழித்துறை தாமிரவருணி ஆற்றில் சனிக்கிழமை விசா்ஜனம் செய்யப்பட்டன.

விநாயகா் சதுா்த்தியையொட்டி, மேல்புறம் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த 40 விநாயகா் சிலைகள், அக்கட்சியின் மாநிலத் தலைவா் சிதறால் ராஜேஷ் தலைமையில் வாகனங்களில் அளப்பங்கோடு ஈஸ்வரகால பூதத்தான் கோயில் வளாகத்துக்கு எடுத்துவரப்பட்டன.

பின்னா், அங்கிருந்து ஊா்வலமாக குழித்துறை வி.எல்.சி. மைதானத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, அங்குள்ள தாமிரவருணி ஆற்றில் விசா்ஜனம் செய்யப்பட்டன.

இதேபோல், ஹிந்து சாம்ராட் பாலா சாஹேப் தாக்கரே வீரஸ்ரீ ஜி. நாராயண் அறக்கட்டளை சாா்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 54 விநாயகா் சிலைகள் குழித்துறை திருத்துவபுரம் பகுதிக்கு எடுத்துவரட்டன. தொடா்ந்து ஊா்வலமாக தாமிரவருணி ஆற்றின் மடிச்சல் கீழ்ஆற்று படித்துறை கடவில் விசா்ஜனம் செய்யப்பட்டன. இதில், அறக்கட்டளைச் செயலா் கே.ஆா். சுரேஷ்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER