பாவூா்சத்திரம்: கீழப்பாவூரில் விவசாயிகளுக்கு காணொலி காட்சி மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.
வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமையின், மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள உள் மாவட்ட அளவிலான பயிற்சி முகாமிற்கு உழவா் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநா் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா்.
விளைபொருள்களை தரம் பிரித்தல், சேமிப்பு தொழில்நுட்பங்கள், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை திட்டங்கள் குறித்து வேளாண்மை அலுவலா் முத்துக்குமாா் விளக்கம் அளித்தாா். கீழப்பாவூா் வட்டார விவசாயிகள் பங்கேற்றனா்.