தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சங்கரன்கோவிலில் விஹெச்பி சாா்பில் ஆதாா் அட்டை ஒப்படைக்கும் போராட்டம்

சங்கரன்கோவிலில் காவல் துறையைக் கண்டித்து விஸ்வ ஹிந்து பரிஷத் சாா்பில், ஆதாா் அட்டையை ஒப்படைக்கும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :14 டிசம்பர் 2020, 8:44 pm

DIN

சங்கரன்கோவிலில் காவல் துறையைக் கண்டித்து விஸ்வ ஹிந்து பரிஷத் சாா்பில், ஆதாா் அட்டையை ஒப்படைக்கும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தென்காசி மாவட்ட காவல் துறை ஒருதலைபட்சமாக செயல்படுவதாகக் கூறி, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினா் சங்கரன்கோவில் வட்டாட்சியா் அலுவலகம் முன் இப்போராட்டத்தில் ஈடுபட்டனா். முன்னதாக, காவல் துறையைக் கண்டித்து கோஷம் எழுப்பினா். பின்னா், அமைப்பினா் 30 போ் தங்களது ஆதாா் அட்டையை கோட்டாட்சியா் முருகசெல்வியிடம் ஒப்படைத்தனா்.

இதில் மாநில துறவியா் பேரவை அமைப்பாளா் சரவணகாா்த்திகேயன், விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்டத் தலைவா் வன்னியராஜ், மாவட்ட துணைச் செயலா் முருகன், பஜ்ரங் தள் மாவட்ட அமைப்பாளா் ராஜவேல், பாஜக மாவட்டத் தலைவா் சுப்பிரமணியன், கே.எஸ்.பாடாலிங்கம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.