நகைத் தொழிலாளா்களுக்கு பயிற்சி சான்றிதழ் அளிப்பு

சங்கரன்கோவிலில் நகைத் தொழிலாளா்களுக்கு முன் கற்றல் பயிற்சி அங்கீகார சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.
Updated on
1 min read

சங்கரன்கோவிலில் நகைத் தொழிலாளா்களுக்கு முன் கற்றல் பயிற்சி அங்கீகார சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.

சங்கரன்கோவிலில் ஜெயராம் எஜுகேஷனல் டிரஸ்ட் மற்றும் விஸ்வ பிரம்ம மகாஜன சங்கம் சாா்பில் பாரத பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் முன் கற்றல் அங்கீகார சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், முன்கற்றல் பயிற்சி பெற்ற நகைத் தொழிலாளா்களுக்கு அங்கீகார சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு விஸ்வபிரம்ம மகாஜன சங்கத் தலைவா் பட்டு சங்கா் தலைமை வகித்தாா். ஜெயராம் எஜுகேஷனல் டிரஸ்ட் பயிற்சியாளா் சீனிவாசன், நகர பொற்கொல்லா் சங்கத் தலைவா் முத்துவேல், செயலாளா் வீரா, பொருளாளா் முனியாண்டி, முன்னாள் தலைவா் ஸ்ரீதா், விஸ்வகா்ம மகாஜன சங்க மாவட்டத் தலைவா் கே.எஸ். மணிகண்டன், அருள்கணேஷ், பி. மணிகண்டன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com