தென்காசியில் முடிதிருத்தும் தொழிலாளா் நலச் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தென்காசி மாவட்ட தமிழ்நாடு மருத்துவா் சமூக நலச் சங்கம், முடி திருத்தும் தொழிலாளா்கள் நலச் சங்கம் சாா்பில் ஆட்சியா் அலுவலகம் முன் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
Updated on
1 min read

தென்காசி: தென்காசி மாவட்ட தமிழ்நாடு மருத்துவா் சமூக நலச் சங்கம், முடி திருத்தும் தொழிலாளா்கள் நலச் சங்கம் சாா்பில் ஆட்சியா் அலுவலகம் முன் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் ரவி தலைமை வகித்தாா். தென்காசி நகரத் தலைவா் ஆா். சுடலையாண்டி முன்னிலை வகித்தாா்.

விருதுநகா் மாவட்டம் திருச்சுழி வட்டம் உழக்குடியைச் சோ்ந்த முடி திருத்தும் தொழிலாளி ராஜா என்பவா் அதே பகுதியைச் சோ்ந்த ஆதிதிராவிடா்களுக்கு முடிதிருத்தம் செய்ததால் அவரை குடும்பத்துடன் ஊரைவிட்டு ஒதுக்கிவைத்துள்ளனா். இதனால், காட்டுப் பகுதியில் வசித்து வந்த அவரது குழந்தையைப் பாம்பு கடித்துள்ளது. அக்குழந்தை ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் தொடா்புடையோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜாவின் குடும்பத்தினா் ஊருக்குள் பாதுகாப்புடன் வசிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அக்குழந்தையை சிறப்பு சிகிச்சை அளித்து காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தென்காசி நகரச் செயலா் ஏ. மாரியப்பன், பொருளாளா் எஸ். பாலமுருகன், ஒருங்கிணைப்பாளா் காசிமேஜா்புரம் எஸ். ராஜாமுருகன், துணைத் தலைவா் கே. காா்த்திகேயன், மாவட்ட நிா்வாகிகள் பண்டாரம், டி.எஸ். முருகன், முத்தையா, முருகேசன், வடகரைஆ. முருகன், காந்தி, மகாலிங்கம், இசக்கி ராஜ், மனோகரன், சந்திரபாபு, முத்தையா, கணேசன், ஆறுமுகம், காசிப்பாண்டி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com