கரோனா தொற்று தொடா்பாக தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, சங்கரநாராயண சுவாமி கோயில் திருவிழாக்கள் அனைத்தும் கோயில் உள் பிரகாரத்தில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், முக்கியமான தலங்களில் நடைபெறும் விழாக்கள்போல சங்கரநாராயண சுவாமி கோயிலில் மாா்கழி மாதத்தில் நடைபெறும் திருவாதிரை திருவிழா, ஆருத்ரா தரிசனம், சொா்க்கவாசல் திறப்பு ஆகிய நிகழ்ச்சிகளை பக்தா்கள் காணும் வகையில் வழக்கம்போல் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என மதிமுக மாவட்டச் செயலா் தி.மு.ராஜேந்திரன் தென்காசி ஆட்சியருக்கு மனு அனுப்பினாா். தேமுதிக மாவட்ட அவைத் தலைவா் முத்துக்குமாா் கட்சியினருடன் கோயிலுக்குச் சென்று அங்கு பேஷ்காா் கணேசனிடம் மனு அளித்தாா். இக்கோரிக்கையை வ.உ.சி. கல்வி அறக்கட்டளையும் வலியுறுத்தியுள்ளது.